இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

152A

படம்
152A கான்கீரிட் வீட்டின் மீது மிகச் சிறிய உந்துகணை செலுத்தி விழுந்தது. காந்தி தன் கண்ணாடியைச் சரி செய்து பார்க்கும் போது அந்த வீடு இருந்த இடத்தில் சிறிய குழி மட்டும் இருந்தது. தன் ஊன்றுகோலை சற்று பலமாக பிடித்துக்கொண்டார். அவரது உதடுகள் நடுங்கின. அவரால் என்ன நடந்தது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனுவை காணவில்லை. தான் மட்டும் இப்படித் தனியாக இருப்பதை நினைத்து யோசனையில் ஆழ்ந்தார். அவரால் முன் பின் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வர முடியவில்லை. இருபது வயதுக்குள் இருக்கும் பத்து பேர் கொண்ட கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு அந்த தெருவில் ஓடிவந்தது. காந்தியின் கைத்தடியை தட்டிவிட்டு ஹோய்..என அவர்கள் கூச்சலிட்டவாறு ஓடிப்போயினர். பின்னாலே நான்கு பேர் கொண்ட கும்பல் கைகளில் கருநிற நாகம் போன்ற துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டும் தோரணையில் நடந்து வந்தனர். அவர்களது நடையில் ஒரு நிதானமும் திமிரும் தொனித்தது. காந்தி சற்று தடுமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கீழே விழுந்த குச்சியை எடுத்து தன் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பார்த்தார். பிச்சைக்காரனே! உனக்கு இங்கே என்ன வேலை? என கைகளில் காப்பு போட்டிருந்த இள...

அடகு- சிறுகதை குறிப்பு

படம்
எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி காலம்: 1944 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                      ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. சிறுகதை சுட்டி:                https://www.sirukathaigal.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-3/ நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                 கா சிவா: தமிழ் புதுக்கவிதையின் பிதாமகர் என அழைக்கப்டும் ந. பிச்சமூர்த்தியின் சிறுகதை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் ஒரு பக...