காலனும் கிழவியும் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். சிறுகதை சுட்டி: https://daily.navinavirutcham.in/?p=22158 நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்: வீரராகவன் : மரணத்தை எதிர்கொள்ளும் பல கதைகள் இருந்தாலும் அங்கதத்தினால் வெல்லும் ஒருகதையை வாசிக்கும்போது புன்னைகை அல்ல வெகுவாகவும் சிரிப்பே மேலோங்குகிறது. அகாலத்தில் இருக்கும் எம...