காவல்- சிறுகதை குறிப்பு
எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. சிறுகதை சுட்டி: https://www.valaitamil.com/kaval_8835.html நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு: மகேந்த்திரன்: ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால், அவளை எளிதில் அடைந்துவிடலாம் என நினைப்பது சமூகத்தில் இருக்கும் ஆணின் பொதுவா...