இடுகைகள்

சுனில் கிருஷ்ணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விஷக்கிணறு குறுநாவல்- சுனில் கிருஷ்ணன்- வாசிப்பு

விஷக் கிணறு குறு நாவல் மீதான வாசிப்பு. நான்கு பகுதிகளை கொண்ட குறு நாவலின் ஒவ்வொரு பகுதியும் மிக கூர்ந்த வாசிப்பை கோருவது எண்ணற்ற வாசிப்பு சாத்தியங்களை வாசகருக்கு அளிப்பதாக இருக்கும் என தோன்றுகிறது. இதன் முதல் பகுதியில் வரும் மனைவியின் தற்கொலையால் மனம் வருந்தும் முதியவர். மனைவியின் தற்கொலையும் அதன் மீதான வழக்கும், மனைவியின் மெளனமும் மிகவும் பாதித்து அவரது மனைவியிடம் மன்னிப்பை கோரும் அவரது ஆத்மா. அவரது சந்தோஷ தருணங்களை தன் மரணத்துடன் எடுத்து சென்று விட்டது போல் அவரை விடாமல் துரத்தும் பழைய துர் நிகழ்வுகளின் நினைவுகள், அவரை ஆழ் கிணற்றில் விழ செய்து கொண்டிருக்கிறது. மெலாவாத்தி மலையில் வரும் தண்டனைக் கிணறு படிமமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பகுதி கதைக்குள் உள்ள உள்கதையில் வரும் குரங்கு கூட்டத்தினை கிணற்றில் விஷம் வைத்து கொள்ளும் நிகழ்வு, ஒரு மரபான இந்திய மனம் எவ்வாறு இந்த மனித மனதின் கொடூரத்தை எதிர் கொள்கிறது என்று சொல்வதாக புரிந்து கொண்டேன். அதன் வழியாக அவரும் அவரது சந்ததிகளும் ஒரு விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது. இரண்டாவது பகுதியில் ஒரு தொன்மக் கதை சொல்லப்படுகிறது. இறையின் தீங்கனாவை ...