இடுகைகள்

மதினிமார்கள் கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதினிமார்களின் கதை - சிறுகதை குறிப்பு - கோணங்கி

மதினிமார்களின் கதை 8- டிசம்பர் அன்று குழுமத்தில் வாசிக்கப்பட்டது. அதன் மகேந்திரனின் வாசக குறிப்பு.  ஜெயமோகனுடனான தொலைபேசி உரையாடலில் கீழ்வருமாறு கோணங்கி சொல்கிறார். ”டேய் நான் என்ன சொல்றேன்னா நாமள்லாம் மெட்றாஸுக்கு வந்தா மெட்ராஸ் நம்மள வேடிக்கை பாக்கணும். நாம ஊருக்குப்போனா நம்மள ஊரு வேடிக்கை பாக்கிற மாதிரி ஆயிடக்கூடாது. நம்ம உப்பு அங்க இருக்கு. அதுமேல நாம இருந்திட்டிருக்கணும்." இன்னொரு உரையாடலில், ”சரிதாண்டா நீ தப்பிச்சுக்குவே.. நீ எப்பவுமே ஒரு வெரதம் புடிக்கிற மனநிலை உள்ள ஆளு. தம்பி ராமகிருஷ்ணன்தான் மாட்டிக்கிட்டானோன்னு சந்தேகமா இருக்கு” கோணங்கிக்கு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பெரும் அளவு மாற்றமாகக்கூடிய தலைமுறையை சார்ந்தவர். உண்மையில் அப்படி நகர்ந்தாலும் தன்னுடைய மண் என்பது கிராமம்தான் என நினைக்ககூடிய தலைமுறையைச் சார்ந்தவர்.  இந்த நொடியில் இருக்கும் நூறு கிராம மக்கள், அங்கிருக்கும் நாய், மரம், ஏரி என எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. ஒரு மரம் இல்லாமல் போனாலும் நமக்கு அந்த சரியான சித்திரம் இல்லாமல் போகும் ஆனால் நம்முடைய கவனக்குறைவால் அதனை நாம் வி...