இடுகைகள்

சிறுகதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

152A

152A கான்கீரிட் வீட்டின் மீது மிகச் சிறிய உந்துகணை செலுத்தி விழுந்தது. காந்தி தன் கண்ணாடியைச் சரி செய்து பார்க்கும் போது அந்த வீடு இருந்த இடத்தில் சிறிய குழி மட்டும் இருந்தது. தன் ஊன்றுகோலை சற்று பலமாக பிடித்துக்கொண்டார். அவரது உதடுகள் நடுங்கின. அவரால் என்ன நடந்தது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனுவை காணவில்லை. தான் மட்டும் இப்படித் தனியாக இருப்பதை நினைத்து யோசனையில் ஆழ்ந்தார். அவரால் முன் பின் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வர முடியவில்லை. இருபது வயதுக்குள் இருக்கும் பத்து பேர் கொண்ட கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு அந்த தெருவில் ஓடிவந்தது. காந்தியின் கைத்தடியை தட்டிவிட்டு ஹோய்..என அவர்கள் கூச்சலிட்டவாறு ஓடிப்போயினர். பின்னாலே நான்கு பேர் கொண்ட கும்பல் கைகளில் கருநிற நாகம் போன்ற துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டும் தோரணையில் நடந்து வந்தனர். அவர்களது நடையில் ஒரு நிதானமும் திமிரும் தொனித்தது. காந்தி சற்று தடுமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கீழே விழுந்த குச்சியை எடுத்து தன் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பார்த்தார். பிச்சைக்காரனே! உனக்கு இங்கே என்ன வேலை? என கைகளில் காப்பு போட்டிருந்த இள...

புலிக்கட்டம் சிறுகதை - எஸ் ராமகிருஷ்ணன் - வாசிப்பு

புலிக்கட்டம் சிறுகதை வாசிப்பு அனுபவம் - க சரத்குமார் புலிக்கட்டம் சிறுகதையின் துவக்கத்தில் களவாட சென்று ஓடு உடைந்து வீட்டுக்குள் விழும் திருடனை ஊர்க்காரர்கள் சேர்ந்து புங்க மரத்தில் கட்டி வைக்கின்றனர். அன்று இரவு முழுவதும் கொட்டும் பனியில் பசி மயக்கத்தில் கிறங்கி நிற்கும் அவனது எண்ண ஓட்டங்களும், கிராம வாசிகளின் முன்பே ஒருமுறை திருடனை பிடித்து அவனை கட்டி வைத்ததால் இறந்து போன உறுத்தலும் சந்திக்கும் புள்ளி தான் கதையாகிறது. கன்னம் ஒட்டிய ஒடிசலான இந்த திருடனை, திருடன் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி உருக்குலைந்து இருப்பவன் எதையாவது திருடி வீட்டிற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருட சென்று பிடிபடுகிறான். அவனது குழந்தையில்லா மனைவியின் நினைவுகளும், அவளது பெட்டியில் இருக்கும் வாடிய தாழம்பூவின் நினைவுகளும் உருவாகிறது. பின்பு சிறு வயதில் அவனது அப்பாவினோடு கீதாரிகள் வரும் சமயங்களில் அவர்களோடு சென்று தங்கிய நினைவுகளும், அவர்களில் ஒருவனோடு அப்பா ஆடிய ஆடு புலி ஆட்டமும் நினைவிற்கு வருகிறது. அந்த ஆடு புலி ஆட்டத்தில் வரிசையாக புலியை நகர விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதால் கோபமுறு...

மதினிமார்களின் கதை - சிறுகதை குறிப்பு - கோணங்கி

மதினிமார்களின் கதை 8- டிசம்பர் அன்று குழுமத்தில் வாசிக்கப்பட்டது. அதன் மகேந்திரனின் வாசக குறிப்பு.  ஜெயமோகனுடனான தொலைபேசி உரையாடலில் கீழ்வருமாறு கோணங்கி சொல்கிறார். ”டேய் நான் என்ன சொல்றேன்னா நாமள்லாம் மெட்றாஸுக்கு வந்தா மெட்ராஸ் நம்மள வேடிக்கை பாக்கணும். நாம ஊருக்குப்போனா நம்மள ஊரு வேடிக்கை பாக்கிற மாதிரி ஆயிடக்கூடாது. நம்ம உப்பு அங்க இருக்கு. அதுமேல நாம இருந்திட்டிருக்கணும்." இன்னொரு உரையாடலில், ”சரிதாண்டா நீ தப்பிச்சுக்குவே.. நீ எப்பவுமே ஒரு வெரதம் புடிக்கிற மனநிலை உள்ள ஆளு. தம்பி ராமகிருஷ்ணன்தான் மாட்டிக்கிட்டானோன்னு சந்தேகமா இருக்கு” கோணங்கிக்கு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பெரும் அளவு மாற்றமாகக்கூடிய தலைமுறையை சார்ந்தவர். உண்மையில் அப்படி நகர்ந்தாலும் தன்னுடைய மண் என்பது கிராமம்தான் என நினைக்ககூடிய தலைமுறையைச் சார்ந்தவர்.  இந்த நொடியில் இருக்கும் நூறு கிராம மக்கள், அங்கிருக்கும் நாய், மரம், ஏரி என எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. ஒரு மரம் இல்லாமல் போனாலும் நமக்கு அந்த சரியான சித்திரம் இல்லாமல் போகும் ஆனால் நம்முடைய கவனக்குறைவால் அதனை நாம் வி...

சாபவிமோசனம் - சிறுகதைப் பற்றி வாசகனின் குறிப்பு - புதுமைப்பித்தன்

 சாபவிமோசனம் கதை 24 - நவம்பர் அன்று குழுமத்தில் விவாதிக்கப்பட்டது. அதைப் பற்றிய மகேந்திரனின் குறிப்பு. வரலாறு நெடுகிலும் ஆணாதிக்கத்தின் உச்ச அழுத்தத்துக்கு பெண்கள் கொள்ளும் இரண்டு நேரெதிரெதிர் வெளிப்பாடுகள் hysteria (வெறி) மற்றும் meloncholia ( முருகயர்தல்) . இவை இரண்டும் பெண்மையின் வெளிப்பாடுகள், ஆனால் அவற்றில் வெளிப்படும் அவர்களே அறியாத ஆற்றல் என்பது ஒன்றே - கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம் குறித்து எழுத்தாளர் அஜிதனின் விமர்சனத்தின் ஒரு பகுதி.  செய்யாத தவறுக்காக சீதை அக்னிப்பிரவேசம் செய்தால் எனத் தெரிந்ததும் ஆவேசம் அடைகிறாள் அகலிகை. அவளது சீற்றம் கண்ணகி போல எனச் சொல்கிறார் புதுமைப்பித்தன். அதுவே பிறகு மாறி வேறோன்றாக வெளிப்படுகிறது. முனிவர் ஒரு குழந்தை இருந்தால் எல்லாம் சரியாகவிடுமென நினைத்து தன் குடிலுக்குள் வந்து தழுவிக்கொள்ளும் கணவனைப் பார்த்து இந்திரனாக இருந்தால் என அவள் பயப்படுகிறாள். இந்திர நாடம் என எண்ணுகிறாள். கணவனாகவும் இருக்கலாம் இந்திரனாகவும் இருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? இவர்கள் (ஆண்கள்) என்ன சொல்கிறார்களோ அதுதானே சரி என்பதைப் போல அவளது எண்ணம் இருக்கும். தனக்க...