சாபவிமோசனம் - சிறுகதைப் பற்றி வாசகனின் குறிப்பு - புதுமைப்பித்தன்
சாபவிமோசனம் கதை 24 - நவம்பர் அன்று குழுமத்தில் விவாதிக்கப்பட்டது. அதைப் பற்றிய மகேந்திரனின் குறிப்பு.
வரலாறு நெடுகிலும் ஆணாதிக்கத்தின் உச்ச அழுத்தத்துக்கு பெண்கள் கொள்ளும் இரண்டு நேரெதிரெதிர் வெளிப்பாடுகள் hysteria (வெறி) மற்றும் meloncholia (முருகயர்தல்). இவை இரண்டும் பெண்மையின் வெளிப்பாடுகள், ஆனால் அவற்றில் வெளிப்படும் அவர்களே அறியாத ஆற்றல் என்பது ஒன்றே - கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம் குறித்து எழுத்தாளர் அஜிதனின் விமர்சனத்தின் ஒரு பகுதி.
செய்யாத தவறுக்காக சீதை அக்னிப்பிரவேசம் செய்தால் எனத் தெரிந்ததும் ஆவேசம் அடைகிறாள் அகலிகை. அவளது சீற்றம் கண்ணகி போல எனச் சொல்கிறார் புதுமைப்பித்தன். அதுவே பிறகு மாறி வேறோன்றாக வெளிப்படுகிறது. முனிவர் ஒரு குழந்தை இருந்தால் எல்லாம் சரியாகவிடுமென நினைத்து தன் குடிலுக்குள் வந்து தழுவிக்கொள்ளும் கணவனைப் பார்த்து இந்திரனாக இருந்தால் என அவள் பயப்படுகிறாள். இந்திர நாடம் என எண்ணுகிறாள். கணவனாகவும் இருக்கலாம் இந்திரனாகவும் இருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? இவர்கள் (ஆண்கள்) என்ன சொல்கிறார்களோ அதுதானே சரி என்பதைப் போல அவளது எண்ணம் இருக்கும். தனக்குள் அடங்கிக்கொள்கிறாள். முனிவர் அகலிகையை தழுவ முடியாமல் சிலை (கல்லை) மட்டுமே தழுவுகிறார். அகலிகை ஒருவகையில் தனக்குள் ஒடுங்கிக்கொண்டாளோ (முருகயர்தல்)?
"சாட்டையின் சொடுக்கைப் போலப் போக்கை மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்தன" அந்த சக்திகள் பற்றித்தான் இந்தக் கதை. கோதமன் ஒரு கட்டத்தில் உணர்ந்துகொள்கிறார், இவள் கற்சிலை என. இனிமேலும் அவளை மனித பெண்ணாக மாற்ற எந்த ராமனும் வரமாண்டன் வந்தாலும் அவள் மாறமாண்டாள் என உணர்ந்து அவர் துறவியானார்.
"படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும் மனசைத்தான் பார்த்தாள் அகலிகை" ஒரே வரியில் அகலிகையின் மனதை வெளிக்காட்டிவிட்டார். திரும்ப திரும்ப அந்த வரியை தன்க்குள் யோசித்துப்பார்க்க வைக்கின்றன. அதனால் தான் புதுமைப்பித்தன் ஒரு மாஸ்டர் என கா நா சு சொல்கிறாறோ?
கருத்துகள்
கருத்துரையிடுக